புதன், 5 ஆகஸ்ட், 2020

தினம் ஒரு மூலிகை : பாதாம் பிசின்

பாதாம் பிசினின் மருத்துவகுணம்




நம் நாட்டில் தோன்றிய சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் மருத்துவ முறைகளில் பலவிதமான உடல் சார்ந்த பிரச்சனைகள், நோய்களுக்கு தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இரு மருத்துவ முறைகளிலும் அக்காலம் தொட்டே சில மரங்களில் வடிகின்ற பிசின் போன்றவையும் மருந்தாக பயன்படும் என கூறப்பட்டிருக்கிறது. அப்படி நமது நாட்டின் வடக்கு பகுதியில் அதிகம் விளையும் ஒரு மரம் தான் “பாதாம் பருப்பு மரம்” அல்லது “வாதுமை மரம்”. இம்மரத்தில் இருந்து கிடைக்கின்ற பாதாம் பருப்பை போலவே, அதிலிருந்து கிடைக்கும் “பாதாம் பிசின்” பல உடல் நோய்கள், குறைபாடுகளை சரிசெய்ய கூடியவை அந்த பாதாம் பிசின் செய்யும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.


 பாதாம் பிசின் பயன்கள்


தாதுக்கள் 

உடலுக்கு எந்தளவு வைட்டமின் சத்துகள் முக்கியமோ அதே அளவு மினரல் எனப்படும் தாதுக்களும் மிகவும் அவசியமாகும் இந்த தாதுக்கள் உடலின் எலும்புகள், தோல் போன்றவற்றின் ஆரோக்கியத்திற்கு மகனும் முக்கியமானதாகும். தாதுக்கள் அதிகமுள்ள பாதம் பிசினை அதிகம் சாப்பிட்டு வர உடலின் தாது தேவை பூர்த்தியாகும்



உடல் சூடு 

நமது நாட்டில் பெரும்பாலான காலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக சிலருக்கு உடல் சூடு அதிகமாகி அவதியுறுகின்றனர். அதிலும் சிலருக்கு உடல் சூடு அதிகமாகி விடுவதால் உடல்நல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பாதாம் பிசினை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து அது கோந்து போன்று ஆன பிறகு சாப்பிட உடல் சூடு தணியும்.

அசிடிட்டி
 
சிலருக்கு அளவிற்கு அதிகமான உணவை சாப்பிடுவதாலும், இரவில் நெடு நேரம் கழித்து உணவு சாப்பிடுவதாலும் நெஞ்செரிச்சல், அசிடிட்டி எனப்படும் வயிற்றில் செரிமான அமிலங்களில் ஏற்றத்தாழ்வால் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் இருப்பது போன்றவை ஏற்படுகிறது. இப்படியான சமயங்களில் பாதாம் பிசினை ஊற வைத்து, சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்றவை நீங்கும். 

உடல் எடை கூட, குறைக்க 

பாதாம் பிசினுக்கு அதிகளவு இருக்கும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும், குறைவான எடை கொண்டவர்கள் எடை கூடவும் செய்யும் ஒரு சிறப்பு ஆற்றல் இருக்கிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் பாதாம் பிசினை கலந்து ஒரு நாளைக்கு ஒருமுறை அருந்த வேண்டும். உடல் எடை கூட விரும்புவார்கள் கொழுப்பு நிறைந்த பாலில் பாதாம் பிசினை கலந்து சாப்பிட வேண்டும்.

உடல் நலம்

 நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டு உடல் நலம் தேறி வரும் நபர்கள் மற்றும் தற்போதும் நோயால் அவதிப்பட்டு வரும் நபர்கள் பாதாம் பிசினை நீரில் ஊற வைத்து வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் நோயால் உடல் இழந்த பலத்தை மீண்டும் உடலுக்கு தரும். நீண்ட கால நோயை போக்குவதற்குண்டான நோயெதிர்ப்பு சக்தியையும் பெருக்கும். 

பேதி 

அதிக வெப்பமிகுந்த கோடைகாலங்கல், கோடைகாலம் முடிந்து பருவ மழை தொடங்கும் மாதங்கள் போன்ற பருவ மாற்றக்காலங்களிலும், கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதாலும் வயிற்றில் பாதிப்பை ஏற்படுத்தி தொடர் பேதி சிலருக்கும் உண்டாகிறது. இந்த சமயத்தில் தண்ணீரில் ஊறவைத்த பாதாம் பிசினை சிறிதளவு உட்கொண்டு வருவதால் தொடர்ந்து ஏற்படும் பேதி நிற்கும்.


சிறுநீரக பிரச்சனைகள்



 கோடைகாலங்களில் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு சிலருக்கு நீர் சுருக்கு ஏற்படுகிறது. மேலும் சிறுநீரக பைகளில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீர் சரியாக கழிக்க முடியாத நிலையும் உண்டாகிறது. ஊற வைத்த பாதாம் பிசினை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும். கோடைகாலங்களில் ஏற்படும் நீர்வறட்சி மற்றும் நீர் சுருக்கு போன்றவை நீங்கும். 

ஆண்மை குறைபாடுகள் 

வெப்பம் அதிகம் நிறைந்த இடங்களில் பணிபுரிவதாலும், இறுக்கமான கால்சட்டைகள்(பாண்ட்) அணிவதாலும் உஷ்ணம் அதிகமாகி இன்று ஆண்கள் பலருக்கும் அவர்களின் விந்து நீர்த்து போய் விடுகிறது. தினமும் இரவு இளம் சூடான பசும்பாலில் பாதாம் பிசினை கலந்து பருகி வந்தால் உடலின் உஷ்ணம் தணிந்து, நரம்புகள் வலுப்பெற்று விந்து கெட்டிப்படும். மலட்டுத்தன்மை இருந்தாலும் அது நீங்கும்.



பெண்கள் 

புதிதாக குழந்தை பெற்ற பெண்களுக்கு உடலில் வலு அதிகம் தேவைப்படுகிறது. வட இந்தியாவில் பல காலமாகவே புதிதாக குழந்தை பெண்களுக்கு பாதாம் பிசின் அதிகம் கலந்த லட்டு இனிப்புகளை வழங்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. அவற்றை சாப்பிடும் பெண்களுக்கு உடலின் எலும்புகள் வலுப்பெறுகிறது மற்றும் கருப்பையில் குழந்தை பிறந்த பிறகும் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. 

புண்கள் 

வெட்டு காயங்கள், மற்றும் தீயினால் ஏற்பட்ட காயங்கள் ஆறுவதற்கு சற்று நாளாகும். இக்காயங்களை குணப்படுத்த நவீன மருந்துகளை பயன்படுத்தினாலும் அவ்வப்போது தண்ணீரில் ஊற வைத்த பாதாம் பிசினை சிறிது உள்ளங்கையில் எடுத்து, நன்றாக குழைத்து புண்கள், காயங்களின் மீது தடவி வந்தால் அவை சீக்கிரத்தில் ஆறும்.

தினம் ஒரு மூலிகை : பித்தப்பை கற்களை இயற்கை முறையில் நீக்கும் வழிமுறைகள்

பித்தப்பை கற்களை 

இயற்கை முறையில் நீக்கும் வழிமுறைகள்



நம்மில் பெரும்பாலானோர் நம்மைத் தாக்கும் பெரிய நோய்களை குறிப்பிட்ட அறிகுறிகளைக் கொண்டு கண்டறிய முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பல முக்கியமான கொடிய நோய்களை ஆரம்ப காலத்தில் கண்டறியவே முடியாது. மாறாக முற்றிய நிலையில் தான் அந்த நோய்களைக் கண்டறிய முடியும். சில நோய்களுக்கான அறிகுறிகள் பொதுவாக சந்திக்கும் உடல்நலக் குறைவாக இருப்பதால், பலர் அதனை சாதாரணமாக விட்டுவிடுவார்கள். பெரும்பாலான மக்கள், குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை தான் பித்தப்பை கற்கள். பித்தப்பையில் உருவாகும் கற்கள், வலியை ஏற்படுத்தும் வரை, அது நமக்கு இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாத ஒன்றாகத் தான் இருக்கும். பித்தப்பை கற்களுக்கான இயற்கை வைத்தியத்தைக் குறித்து காணும் முன்பு, அது எதனால் வருகிறது என்பதைக் காண்போம்.

பித்தக்கற்கள் என்பது என்ன?

 பித்தக்கற்கள் என்பது கடினமான பந்து போன்று பித்தப்பையில் உருவாகுபவை. இந்த பித்தக்கற்கள் அதிகப்படியான கொலஸ்ட்ரால் அல்லது பித்த உப்புக்களால் உருவாகும். இந்த கற்கள் சிறிய கற்கள் முதல் பெரிய அளவிலான டென்னிஸ் பந்து அளவு வரை, பல்வேறு அளவுகளில் உருவாகும்.

எது பித்தக்கற்களை உருவாக்குகிறது? 

எப்போது ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளதோ, அப்போது பித்தக்கற்கள் உருவாகும். அதிலும் சாச்சுரேட்டட் கொழுப்புக்களை கரைப்பதற்கு போதுமான பித்தநீர் பித்தப்பையில் சுரக்காமல் இருக்கும் போது பித்தக்கற்களாக உருவாகின்றன. இருப்பினும் பித்தக்கற்கள் பித்த உப்புக்களாலும் உருவாகின்றன. கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினால் பெண்களுக்கு பித்தக்கற்கள் வரும் வாய்ப்பு அதிகமாகின்றன.


பித்தக்கற்களை இயற்கையாகவே கரைக்க உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.


ஆப்பிள் சீடர் வினிகர்

 * 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

 * இல்லாவிட்டால் ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து குடிக்கலாம். இதனால் பித்தக்கற்கள் இயற்கையாக கரைந்து வெளியேறிவிடும்.

ஆப்பிள் ஜூஸ் 

பித்தக்கற்கள் இருப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸை குடித்து வருவது நல்லது. அதுவும் தோல் நீக்காத ஆப்பிளை அரைத்து ஜூஸ் தயாரித்துக் குடிக்க வேண்டும். இப்படி தினமும் ஒரு டம்ளர் குடித்து வர, வலிமிக்க பித்தக்கற்கள் இயற்கையாகவே வெளியேறிவிடும்

மஞ்சள் 


1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் சாப்பிட்டு வந்தால், பித்தக்கற்கள் மாயமாய் மறைந்துவிடும். இதற்கு மஞ்சள் மற்றும் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் தான் முக்கிய காரணமாகும். இதனை அனைவருமே பின்பற்றலாம். இதனால் பித்தப்பையின் ஆரோக்கியம் மேம்படும்.

பால் நெருஞ்சில் 


ஒரு பாத்திரத்தில் 3 கப் நீரை ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் நெருஞ்சில் விதைகளைத் தட்டிப் போட்டு, நன்கு 20 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து குடியுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 கப் குடித்து வந்தால், பித்தப்பையில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறிவிடும்.

எலுமிச்சை ஜூஸ் 


ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். வேண்டுமானால் நாள் முழுவதும் எலுமிச்சை ஜூஸைக் குடித்து வரலாம். இதனால் வலிமிக்க பித்தப்பை கற்களை எளிதில் வெளியேற்றலாம்.

கிரான்பெர்ரி ஜூஸ்


 பித்தக்கற்கள் இருப்பவர்கள் தினமும் கிரான்பெர்ரி ஜூஸை ஒரு டம்ளர் குடித்து வந்தால், பித்தக்கற்கள் மற்றும் பித்தப்பை பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். முக்கியமாக கிரான்பெர்ரி ஜூஸ் உடன் சிறிது நீர் கலந்து கொள்ளுங்கள். ஏனெனில் கிரான்பெர்ரி ஜூஸ் சற்று அதிக அமிலத்தன்மை வாய்ந்தவை.

தேங்காய் எண்ணெய் 


3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அதில் 1/4 டம்ளர் ஆப்பிள் ஜூஸ், பாதி எலுமிச்சையின் சாறு, ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து இறக்கி, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை தினமும் ஒருமுறை உட்கொள்ள வேண்டும். இதனால் பித்தப்பையில் உள்ள பிரச்சனைகள் முற்றிலும் அகலும்.

விளக்கெண்ணெய்

 

ஒரு கப் விளக்கெண்ணெயை லேசாக சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் ஒரு துணியை அந்த எண்ணெயில் நனைத்து பிழிந்து, வயிற்றின் வலது பக்கத்தில் வைத்து, ஒரு பிளாஸ்டிக் ஷீட்டால் சுற்றிக் கொள்ள வேண்டும். பின்பு சுடுநீர் கொண்டு அவ்விடத்தில் 30-40 நிமிடம் ஒத்தடம் கொடுங்கள். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்தால், பித்தக்கற்களில் இருந்து விடுபடலாம்

வைட்டமின் சி உணவுகள்


 வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு மட்டும் நல்லதல்ல, பித்தப்பை கற்கள் உருவாவதையும் தடுக்கும். ஒருவரது உடலில் போதிய அளவில் வைட்டமின் சி இருந்தால், கொலஸ்ட்ரால் உற்பத்தி குறைந்து, பித்தக்கற்கள் உருவாகும் வாய்ப்பு குறையும். எனவே வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களான எலுமிச்சை, ஆரஞ்சு, கிவி, பப்பாளி, மாம்பழம், கொய்யா போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.

டேன்டேலியன் 


ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் உலர்ந்த டேன்டேலியன் வேரை போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடித்து வாருங்கள். இந்த டீயை ஒருவர் தினமும் 2 முறை குடித்து வந்தால், பித்தப்பை கற்கள் இயற்கையாக வெளியேறிவிடும். ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள், இந்த டீயைக் குடிக்கும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்வது நல்லது.

பீட்ரூட் 


பீட்ரூட்டை சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து அரைத்து ஜூஸ் தயாரித்துக் கொள்ளுங்கள். இந்த பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு கப் குடித்து வந்தால், பித்தப்பை கற்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். முக்கியமாக இந்த ஜூஸ் குடித்தால் கொலஸ்ட்ராலால் ஏற்படும் கற்களைத் தடுக்கலாம்.

புதினா

 

ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அதில் சிறிது புதினா இலைகளைப் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் வடிகட்டி தேன் கலந்து குடியுங்கள். இந்த டீயை உணவு இடைவேளையின் போது குடிப்பது நல்லது. ஒருவர் தினமும் புதினா டீயைக் குடித்து வந்தால், பித்தப்பை சம்பந்தமான பிரச்சனைகள் முற்றிலும் அகலும்.


பேரிக்காய் ஜூஸ் 


1/2 டம்ளர் பேரிக்காய் ஜூஸ் உடன், 1/2 டம்ளர் சுடுநீர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை குடித்து வந்தால், பித்தக்கற்கள் வளர்வதைத் தடுக்கலாம். குறிப்பாக பேரிக்காயில் உள்ள பெக்டின் கொலஸ்ட்ராலைக் கரைப்பதோடு, கொலஸ்ட்ரால் கற்கள் உருவாவதைத் தடுக்கும்